

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை (டிச.19) பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இரு மாவட்டங்களில் தொடரும் வெள்ளப் பாதிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம்
கனமழை மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.