47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

காலை 10 மணி வரை, 3 மணி நேரத்துக்கு தஞ்சை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2023, 9:04 am

DIN


சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை, 3 மணி நேரத்துக்கு தஞ்சை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், இன்று காலை 10 மணி வரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என்றும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கவும், சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதோடு, தேனி, தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.