அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மிதமான மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. 

கடந்த இரு தினங்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com