4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

வெள்ள பாதிப்புகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளுடன் காணொலியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
Published on
Updated on
1 min read

வெள்ள பாதிப்புகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளுடன் காணொலியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன், சென்னை எழும்பூர் எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.  

அவசரகால கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு, நிவாரணப் பணிகளை முதல்வர் கண்காணித்தார். மேலும் தாமிரபரணி ஆறு, அணைகளின் நீர்வரத்து, நீர்மட்டம் உள்ளிட்டவைகளை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும் பால் விநியோகம், மருத்துவ சேவை போன்றவை குறித்தும்  முதல்வர்  கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com