நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்னையில் உள்ள வானிலை மையத்தை மூடிவிடலாம்: அன்புமணி

சென்னையில் உள்ள வானிலை மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :22 டிசம்பர் 2023, 3:07 pm IST

சென்னையில் உள்ள வானிலை மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை. இந்த வேலையை 5 ஆம் வகுப்பு மாணவன் செய்வான். 

வானிலை மையம் பெரும்பாலும் கூறுவது, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஒரு சில மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்யும். இவ்வளவுதான்.

தொழில்நுட்பம் எவ்வளவு மாற்றமடைந்தாலும், சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ளது. வானிலை ஆய்வு மையம் தான் முன்னெச்சரிக்கை தர வேண்டும்.

குறிப்பிட்ட மாவட்டத்தில் எத்தனை செ.மீ பெய்யும் என்பதை வானிலை மையம் முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் முன்கூட்டியே எச்சரிக்கை விடப்படும். அதற்கு ஏற்றப்படி மக்களும் திட்டமிட்டு கொள்வார்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.