4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2023, 3:35 am

DIN

வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கை கரைப் பகுதியை இன்று கடக்கவுள்ளது. இதனால், வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிப்ரவரி 3ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு, மீன்பிடிச் சீட்டு வழங்கப்படாததால் சுமார் 1,800 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மீனவர்களுக்கும் நாளைவரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் நாளைவரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.