ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 20 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறாா். அவர் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். 

ஏற்கெனவே அவருக்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக திமுகவினா் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அமைச்சா்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, வி.செந்தில்பாலாஜி, ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உள்ளிட்டோா் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனா். திமுகவினா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தனது தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com