அதிரடியாக மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!

கடந்த இரண்டு நாள்களாக சற்று குறைந்து இருந்த தங்கத்தின் விலை திங்கள்கிழமை(பிப்.6) அதிரடியாக சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.42,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 
அதிரடியாக மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!


சென்னை: கடந்த இரண்டு நாள்களாக சற்று குறைந்து இருந்த தங்கத்தின் விலை திங்கள்கிழமை(பிப்.6) அதிரடியாக சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.42,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயித்தை தாண்டியது.

பிப்ரவரி 2 ஆம் தேதி ஒரே நாளில், ரூ.720 விலை உயர்ந்து ரூ.44,040 ஆக விற்பனையானது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக சற்று குறைந்து இருந்த தங்கத்தின் விலை திங்கள்கிழமை (பிப் 6) அதிரடியாக சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. 

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 அதிகரித்து ரூ.5,820 ஆக விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.264 வரை அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,824 ஆக விற்பனையானது.  

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,365 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.240 வரை அதிகரித்து ரூ.42,920 ஆக விற்பனையாகி வருகிறது. 

வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.74 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com