திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் செவ்வாய்கிழமை சுமார் 25 அடி தொலைவு கடல் உள்வாங்கியது.
2004 டிசம்பர் 26-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின் அவ்வப்போது கோயில் கடற்கரை பகுதியில் நாழிக்கிணறு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது கடல் சுமார் 25 அடி முதல் 50 அடி தொலைவு கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்குத் திரும்புவதும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் கிருமி தொற்றுக்கு 9 பேர் பலி!
இந்நிலையில், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் உள்வாங்கியதால், சங்கு, சிப்பிகளை பக்தர்கள் சேகரித்தனர்.