நியாய விலைக் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு!
நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
* இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது.
* ஒரே நபர் இரண்டு குடும்ப அட்டை வைத்துள்ளார்களா என்பது குறித்து களஆய்வு நடத்த வேண்டும்.
* நியாய விலைக் கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது.
* நியாய விலைக் கடைகளில், பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே இலவச வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும்.
* காலை 9 மணிக்கு நியாய விலைக் கடைகள் திறக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிக்க: காஷ்மீரில் ராகுல் காந்தி!
இவ்வாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...