

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வடக்கு காஷ்மீரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு வந்தடைந்தார். இது அவரின் தனிப்பட்ட பயணமாக இருக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
காந்தி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தனது ஒற்றுமை நடைப்பயணத்தை முடித்த நிலையில் தற்போது மீண்டும் காஷ்மீருக்கு வந்துள்ளார்.
அதேசமயம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ராகுல் மறுத்துவிட்டார். அவரிடம் கருத்துக் கேட்டபோது, "நமஸ்காரம்" என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார்.
காங்கிரஸ் தலைவர் தனிப்பட்ட பயணத்தில் இருப்பதாகவும், பள்ளத்தாக்கில் தனியார் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவிருப்பதாகவும், காங்கிரஸ் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.