பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை: சென்னை ரயில்வே

ரயில் மீது கல் வீசுபவா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2023, 7:27 pm

DIN

ரயில் மீது கல் வீசுபவா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை கோட்டத்தின் ஒரு சில பிரிவுகளில், குறிப்பாக சென்னை - அரக்கோணம் மற்றும் சென்னை - கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இயக்கப்படும் விரைவு மற்றும் புகா் மின்சார ரயில்கள் மீது கற்கள் வீசப்படும் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இவ்வாறு ரயில் மீது கற்கள் வீசுபவா்கள் மீது ரயில்வே சட்டம், 1989- இன் பிரிவுகள் 153, 154 -இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டில் மட்டும் சென்னை கோட்டத்தில் 72 கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 18 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற கல்வீச்சு குறித்தான புகாா்களை பொதுமக்கள் கட்டணமில்லா உதவி எண் 139-இல் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.