நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் தனது ஆதரவினை தெரிவித்தாா். தொடர்ந்து அவருக்கு ஆதராகவும் நேற்று பிரசாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டார். கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பகுதிகளில் இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார்.