முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இதையும் படிக்க | மீண்டும் கேரள அமைச்சரானார் சஜி செரியான்
இந்நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாவல் பிரிவில் எழுத்தாளர் தேவி பாரதி, சிறுகதை பிரிவில் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ், கவிதை பிரிவில் எழுத்தாளர் தேவதேவன், மொழிபெயர்ப்பு பிரிவில் எழுத்தாளர் சி.மோகன், நாடகம் பிரிவில் நாடகக் கலைஞர் பிரளயன் ஆகியோருக்கு பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னையில் ஜனவரி 6ஆம் தேதி துவங்க உள்ள புத்தகக் காட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகளையும், பரிசுத் தொகையையும் வழங்க உள்ளார்.
சென்னை புத்தக்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பாண்டு புத்தகக் காட்சிக்காக 1000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.