பொங்கல் பரிசுத் தொகுப்பு - நியாயவிலைக் கடைகளுக்கு அறிவுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக கூட்டுறவு ஊழியர்களுக்கு மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக கூட்டுறவு ஊழியர்களுக்கு மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பச்சரிசியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. தூய்மையான, வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும். 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.இரண்டு 500 ரூயாய் தாள்களை மட்டுமே வழங்க வேண்டும். பயனாளர்களை வேறு தேதிக்கு வாருங்கள் என சொல்லக்கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு அளிக்கப்படவுள்ளது. இந்தத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை ஆகியவற்றுடன் முழு நீளக் கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பரிசுத் தொகுப்பை அளிப்பதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமாா் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் டோக்கன்களில் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதி, நேரத்தில் வந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com