சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்காக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடி சொத்துகள் சேர்த்ததாக 2015-ல் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இதையும் படிக்க | ஆளுநருக்கு எதிராக சென்னையில் சுவரொட்டிகள்
இந்நிலையில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா உள்பட நான்கு பேர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காலை ஆ.ராசா ஆஜரானார்.
இந்த வழக்கில், ஆ.ராசா தரப்பிற்கு குற்றப்பத்திரிகை நகல் அளிக்கப்பட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.