மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடியில் இளைஞர் கொலை

தூத்துக்குடியில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

News image
Updated On :13 ஜனவரி 2023, 8:02 am

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடியில், பாளையங்கோட்டை சாலை மையவாடி அருகே உள்ள டீக்கடை முன்பு இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக தென்பாகம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலையில் தகவல் வந்ததாம். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீஸார், உடல் கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தை நகர டிஎஸ்பி சத்யராஜ் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

உயிரிழந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையில்,  சாந்தி நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் கார்த்திக் (35) என குறிப்பிட்டிருந்தது.

ஆதார் அட்டையில் குறிப்பிட்ட முகவரியில் சென்று போலீஸார் விசாரித்தபோது அப்படி யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. எனவே, உயிரிழந்த இளைஞர் ஆதார் அட்டையில் உள்ளவர்தானா என்பது குறித்தும், கொலை செய்தவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.