போகி பண்டிகையையொட்டி மக்கள், பழைய பொருள்களை எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.
பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற அடிப்படையில் சென்னையில் மக்கள் பழைய பொருள்களை எரித்து போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கின்றனர்.
இதனால், சென்னை முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது.