தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை சர்வதேச புத்தக காட்சியின் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இலக்கியச் செழுமை மிக்க தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும். உலக அளவில் சிறகை விரித்துள்ளது தமிழ்நாடு. சர்வதேச புத்தக காட்சியை சென்னையில் ஆண்டுதோறும் நடத்த வேண்டும். உலகளாவிய அறிவு பரிமாற்றமே சென்னை சர்வதேச புத்தக காட்சியின் நோக்கம்.
தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் நாள்கள் சர்வதேச புத்தக காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் 3 நாள்கள் சர்வதேச புத்தக காட்சி நடைபெற்றுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப் புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு முதல்முறையாக தமிழில் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

