சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தாம் இந்த கைப்பேசியை ஒப்படைக்க வந்ததாக செல்வி தெரிவித்தார். ஆனால், கைப்பேசியை தாம் பெற்றுக் கொள்ள முடியாது என்றும், சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் தலைமைக்குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி புஷ்பராணி தெரிவித்தார். இதையடுத்து செல்வி, தனது மகள் ஸ்ரீமதி பயன்படுத்திய கைப்பேசியை சிபிசிஐடி விசாரணை அலுவலரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவருடன் வழக்குரைஞர்கள் பாபு, பெல்ஷியா ஆகியோர் உடன் சென்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளி பிளஸ் 2 மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி அவரது தந்தை சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா். மாணவி பயன்படுத்திய கைப்பேசி விசாரணைக்காக ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.