காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதியவர் ஒருவரை கொலை செய்தது தொடர்பாக ஆட்டோ ஓட்டுரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள்(70) இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் மதன் என்பவருக்கும் அடிக்கடி பொதுப்பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவ நாளன்றும் தகராறு ஏற்பட்டதால் மதன் பெருமாளின் மீது கல்லைத் தூக்கிப் போட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் பெருமாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கொலைக்கு காரணமான மதனை காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஐயங்கார்குளம் கிராமப்பகுதியில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


