ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்கப்பார்ப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகள் பாடங்களாக இருந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இருமொழி கொள்கையே காரணமாக உள்ளது. மத்திய பாஜக ஹிந்தி மொழியை திணிப்பதை தனது வழக்கமாக கொண்டுள்ளது. திமுக தோன்றியது முதலே மொழி காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. இதனால், ஹிந்தி மொழிக்கு எதிரான போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.