தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில் ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில், தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களும், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைநிற புறாக்களும் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்-மாணவிகளின் பறையாட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ரூ.10.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


