இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. மணிமேகலை வரவேற்றார். ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஸ்குமார், நாமக்கல் மக்களவை உறுப்பினர். ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பொன்னுசாமி, திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, சிறப்பு திட்ட செயலாக்கத்தின் அரசு சிறப்பு செயலாளர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.