விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் வீரர்கள் பற்றி...

News image

தோனி, ரோஹித், விராட் கோலி - Photo: X / IPL

Updated On :20 மார்ச் 2026, 12:27 pm IST

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து தற்போது வரை நான்கு வீரர்கள் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகின்றது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி திடலில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து 19-வது சீசன் வரை 4 வீரர்கள் மட்டுமே தொடர்ந்து அனைத்து சீசன்களிலும் விளையாடி வருகிறார்கள்.

மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்து 19-வது ஆண்டாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.

44 வயதாகும் தோனி, தற்போதை ஐபிஎல் வீரர்களில் மிகவும் வயதான வீரராக உள்ளார்.

சிஎஸ்கேவுக்கு தடை விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளை தவிர்த்து, 2008 முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் தோனி, கேப்டனாக 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்திருக்கிறார்.

ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் 2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

2008 முதல் 2010 வரை டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ரோஹித் சர்மா, 2011 முதல் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ளார்.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் 8,600-க்கும் அதிகமான ரன்கள் குவித்து, பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

மணீஷ் பாண்டே

இந்திய கிரிக்கெட் வீரரான மணீஷ் பாண்டேவும் 2008 முதல் பல்வேறு அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் 2009 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக களமிறங்கிய மணீஷ் பாண்டே, சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Summary

4 players who have been playing in the IPL since its inception! Who are they?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.