நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

ஐபிஎல் 2026: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே, ஆர்சிபி?

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பற்றி...

ipl 2026

மகேந்திர சிங் தோனி, விராட் கோலி - ANI

Published On :11 மார்ச் 2026, 4:22 pm IST

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தொடக்க நிகழ்வும் முதல் போட்டியும் நடப்பு சாம்பியனாக இருக்கும் அணிக்குச் சொந்தமான மைதானத்தில்தான் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு தொடக்க நிகழ்வுகள் பெங்களூரு சின்னசாமி திடலில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளப் போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்னும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படாமல் இருக்கின்றன.

இந்த வாரத்தில் முதல் பாதி தொடருக்கான அட்டவணைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதியைப் பொறுத்து இரண்டாம் கட்ட அட்டவணைகள் வெளியிடப்படும்.

இந்த நிலையில், தொடக்க போட்டியில் பெங்களூரு அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

IPL 2026: Will CSK and RCB clash in the first match?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.