பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஈரோடு இடைத்தேர்தல்: 2 நாள்களில் முக்கிய முடிவு -பாஜக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் 2 நாள்களில் முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2023, 12:03 pm

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் 2 நாள்களில் முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன. 31) மாலை நடைபெற்று வருகிறது. 

சென்னை தியாகராய நகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் பாஜக மூத்த நிர்வாகிகள், மாநில - மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மாநில பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். 

இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து எங்களின் கடுத்துகளைக் கேட்டு கட்சீன் தேசியத் தலைமை முடிவு செய்யும் எனத் தெரிவித்த அவர், 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக 2 நாள்களில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.