கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மீண்டும் உச்சத்தை எட்டிய காய்கறிகள் விலை: தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை

சென்னையில் காய்கறி விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிலோ தக்காளியின் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2023, 12:07 am

சென்னையில் காய்கறி விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிலோ தக்காளியின் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து, விலையும் அதிகரித்தது. ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்கிய காய்கறிகளின் விலையேற்றம், மாத இறுதி வாரத்தில் சற்று குறைந்தது. இந்த விலை குறைப்பு ஒரு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. தற்போது வார இறுதி நாள்கள் என்பதால், காய்கறிகளின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நடுத்தர குடும்பவாசிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மொத்த விற்பனையில் சனிக்கிழமை நிலவரப்படி, (கிலா கணக்கில்) வெங்காயம் ரூ.25, உருளை கிழங்கு ரூ.35, காராமணி, பாகற்காய், கேரட் ரூ.65, வெண்டைக்காய், கத்தரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை கடந்த 2 நாள்களுடன் ஒப்பிட்டால் ரூ.5 முதல் ரூ.10 உயா்ந்துள்ளது.

இதில், 1 கிலோ தக்காளி மீண்டும் ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை, சனிக்கிழமை மீண்டும் அதிகரித்து சில்லறை விற்பனையில் ரூ.100-ஐ எட்டியுள்ளது.

இதுபோல் சின்ன வெங்காயம் ரூ.85, பீன்ஸ் ரூ.110, பச்சை மிளகாய் ரூ.90, பட்டாணி ரூ.190, இஞ்சி ரூ.200, பூண்டு ரூ.140 விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் இவற்றின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், காய்கறிகளின் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.