மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மீண்டும் உச்சத்தை எட்டிய காய்கறிகள் விலை: தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை

சென்னையில் காய்கறி விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிலோ தக்காளியின் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜூலை 2023, 12:07 am

DIN

சென்னையில் காய்கறி விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிலோ தக்காளியின் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து, விலையும் அதிகரித்தது. ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்கிய காய்கறிகளின் விலையேற்றம், மாத இறுதி வாரத்தில் சற்று குறைந்தது. இந்த விலை குறைப்பு ஒரு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. தற்போது வார இறுதி நாள்கள் என்பதால், காய்கறிகளின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நடுத்தர குடும்பவாசிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மொத்த விற்பனையில் சனிக்கிழமை நிலவரப்படி, (கிலா கணக்கில்) வெங்காயம் ரூ.25, உருளை கிழங்கு ரூ.35, காராமணி, பாகற்காய், கேரட் ரூ.65, வெண்டைக்காய், கத்தரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை கடந்த 2 நாள்களுடன் ஒப்பிட்டால் ரூ.5 முதல் ரூ.10 உயா்ந்துள்ளது.

இதில், 1 கிலோ தக்காளி மீண்டும் ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை, சனிக்கிழமை மீண்டும் அதிகரித்து சில்லறை விற்பனையில் ரூ.100-ஐ எட்டியுள்ளது.

இதுபோல் சின்ன வெங்காயம் ரூ.85, பீன்ஸ் ரூ.110, பச்சை மிளகாய் ரூ.90, பட்டாணி ரூ.190, இஞ்சி ரூ.200, பூண்டு ரூ.140 விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் இவற்றின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், காய்கறிகளின் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.