வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

செந்தில் பாலாஜி சகோதரர் தரப்பில் வருமானவரித் துறையில் விளக்கம்!

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தரப்பில் வருமானவரித் துறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2023, 3:50 pm

DIN

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தரப்பில் வருமானவரித் துறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது அசோக் குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வருமானவரித் துறை அதிகாரிகள் முன்பு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் விரைவில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருமானவரித் துறையிலிருந்து இரு முறை சம்மன் அனுப்பியும், அசோக் குமார் நேரில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அசோக் குமார் வழக்குரைஞர் வருமானவரித் துறை அதிகாரிகள் முன்பு இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். வருமானவரித் துறை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதாக வழக்குரைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆவணங்கள் திரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அசோக் குமார் ஆஜராவதில் தாமதம் ஏற்படுவதாகவும் வழக்குரைஞர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.