தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் தொடர்பான வரைபடத்தை பார்வையிட்ட சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர்.
தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் தொடர்பான வரைபடத்தை பார்வையிட்ட சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோ.வி. செழியன் தலைமையிலான குழுவினா்  தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காடவராயன் குளம், வடிகால் வாய்க்கால், சமுத்திரம் ஏரியை ஆய்வு செய்தனர். 

பின்னர்  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது அறிக்கை பெறப்பட்டு சட்டப்பேரவை மனுக்கள் குழு 9 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்பகலில் மனுதாரர்கள், அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்த ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அனைத்து மனுதாரர்களையும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வரவழைத்து, அனைத்து துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தவுள்ளோம். நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வில் பொது நலன் குறித்த மனுக்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த காலத்தில் நிலுவையில் இருந்த மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சாலை வசதி, குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர் வாருதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகள் அதிகமாக உள்ளன.

சமுத்திரம் ஏரி கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதையுடன் கூடிய மேம்பாட்டு பணி 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து முடிவு செய்யப்படும் என்றார் கோவி. செழியன்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டப்பேரவை மனுக்கள் குழுச் செயலர் கி. சீனிவாசன், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com