வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்: கையடக்கக் கணினி வாங்க ஒப்பந்தம்!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:19 pm

DIN


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கைரேகை விவரங்களை பதிவு செய்ய ரூ. 15,000 மதிப்புடைய கையடக்கக் கணினிகள் வாங்க ஒப்பந்தம் (டெண்டர்) வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே பயனாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ள பெண்கள் அல்லது குடும்பத் தலைவி குறித்த விவரங்களை பதிவு செய்ய கையடக்கக் கணினி பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் கைரேகை பதிவு செய்யும் கருவியும் அனைத்து நியாயவிலைக் கடைகளில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கைரேகை விவரங்களை பதிவு செய்ய ரூ. 15,000 மதிப்புடைய கையடக்க கணினிகள் வாங்க தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.