மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கைரேகை விவரங்களை பதிவு செய்ய ரூ. 15,000 மதிப்புடைய கையடக்கக் கணினிகள் வாங்க ஒப்பந்தம் (டெண்டர்) வெளியிடப்பட்டுள்ளது
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே பயனாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ள பெண்கள் அல்லது குடும்பத் தலைவி குறித்த விவரங்களை பதிவு செய்ய கையடக்கக் கணினி பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் கைரேகை பதிவு செய்யும் கருவியும் அனைத்து நியாயவிலைக் கடைகளில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கைரேகை விவரங்களை பதிவு செய்ய ரூ. 15,000 மதிப்புடைய கையடக்க கணினிகள் வாங்க தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.