கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 
Published on

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் சிறப்புப் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும். 

இந்நிலையில் நடப்பாண்டு காமராஜர் பிறந்தநாள் நாளை (சனிக்கிழமை) என்பதால் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com