நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் கோயில் தேர் விழா: வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலைவாசல் அருகே வீரகனூரில் 27 ஆண்டுகளுக்குப் பின் அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் கோயில் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூலை 2023, 10:43 am IST


சேலம்: தலைவாசல் அருகே வீரகனூரில் 27 ஆண்டுகளுக்குப் பின் அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் கோயில் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் திருக்கோயில் 27 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 7 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருத்தேர் விழா தொடங்கி, வெள்ளிக்காப்பு, சிம்மவாகனம், சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் முத்துப்பல்லக்கில் பவனி வருதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மனை திருத்தேரில் ஏற்றப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து , பின்னர் பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில், வீரகனூர் மட்டுமின்றி சொக்கனூர், ராமநாதபுரம், தெடவூர், ராயர் பாளையம், லத்துவாடி, திட்டச்சேரி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.