தமிழ்நாடு
உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி பலி
உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி ஒருவர் பலியானார்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி ஒருவர் பலியானார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு கோடாங்கிபட்டியைச் சேர்ந்த முருகன்(50) என்பவர் செல்லம் தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், மலையடிவாரத்துள்ள 18 கால்வாய் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது காட்டு யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து கோம்பை காவல் துறையினர் மற்றும் மற்றும் வனத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் .