நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாய்க்கால் தூர்வாரும் போது பெருமாள் சிலை கண்டெடுப்பு: வட்டாட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர் வாரும்பொழுது கருங்கல் பெருமாள் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :18 ஜூலை 2023, 9:38 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர் வாரும்பொழுது கருங்கல் பெருமாள் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

நெடுவாசல் ஊராட்சி செருகடம்பனூர் கிராமத்தில் உள்ள சிங்கமடை வாய்க்கால் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும்பொழுது 5 அடி உயரமுள்ள பழமை வாய்ந்த பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை கிராம மக்கள்  கரைக்குக் கொண்டு வந்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Story image

தகவல் அறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் நேரில் சென்று  5 அடி உயரமுள்ள பழமைவாய்ந்த பெருமாள் கற்சிலையை ஆய்வு செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். பொறையார் காவல்துறையினர் மற்றும் வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள்  உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.