வாய்க்கால் தூர்வாரும் போது பெருமாள் சிலை கண்டெடுப்பு: வட்டாட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர் வாரும்பொழுது கருங்கல் பெருமாள் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.


மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர் வாரும்பொழுது கருங்கல் பெருமாள் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
நெடுவாசல் ஊராட்சி செருகடம்பனூர் கிராமத்தில் உள்ள சிங்கமடை வாய்க்கால் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும்பொழுது 5 அடி உயரமுள்ள பழமை வாய்ந்த பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை கிராம மக்கள் கரைக்குக் கொண்டு வந்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தகவல் அறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் நேரில் சென்று 5 அடி உயரமுள்ள பழமைவாய்ந்த பெருமாள் கற்சிலையை ஆய்வு செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். பொறையார் காவல்துறையினர் மற்றும் வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...