சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தொடா்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை27 - ஆகஸ்ட் 1) வரை 6 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.