47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நச்சுவாயு: திருப்பூர் அருகே தலைவலி, வாந்தியால் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் சலவை ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவை சுவாசித்த 20 பேர் தலைவலி, வாந்தியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News image
நச்சுவாயு: திருப்பூர் அருகே தலைவலி, வாந்தியால் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
Updated On :7 ஜூன் 2023, 11:53 am

DIN

திருப்பூர் : திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் சலவை ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவை சுவாசித்த 20 பேர் தலைவலி, வாந்தியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து புதன்கிழமை பிற்பகலில் நச்சுவாயு வெளியேறியுள்ளது. இந்த வாயுவை சுவாசித்த அப்பகுதியைச் சேர்ந்த 15 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு தலைவலி, வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் 8 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.  

இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாநகர் நகர் நல அலுவலர் கெளரி சரவணன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் ஏராளமான சலவை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு துணிகளை காம்பேக்டிங் செய்யும்போது ஒரு விதமான ரசாயனம் சேர்க்கப்படுவதால் இத்தகையை பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சலவை ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.