சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகின்ற 13 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.