தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சுகாதாரமற்ற குடிநீர்: ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலைமறியல்!

மறியலில் ஈடுபட்ட மக்களை காவல் ஆய்வாளர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :10 ஜூன் 2023, 12:36 pm IST

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் குடிநீரில் உப்பு நீர் கலந்து பொதுமக்களுக்கு வழங்குவதை கண்டித்து சிறுமுகை -அன்னூர் சாலையில்   பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

மறியலில் ஈடுபட்ட மக்களை காவல் ஆய்வாளர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் குடிநீரில் உப்பு நீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டியும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் சிறுமுகை-அன்னூர் சாலையில் வெள்ளி குப்பம் பளையம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீரில் உப்பு நீர் அதிகமாக வருவதால் அதனை பொதுமக்கள் குடிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்க பட்டது.

இதனையடுத்து சிறுமுகை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கூத்தாமன்டி பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கும் இடத்தில் ஓடை நீர் அதிக அளவில் பவானி ஆற்றில் கலப்பதால் இந்த பிரச்னை உள்ளதாக ஊராட்சி தலைவர் பேசி கொண்டு இருந்தார்.

அப்போது அங்க கூட்டத்தை கலைக்க வந்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா திடீரென மறியலில்  ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல கூறி அங்கு கூடியிருந்த வரிகளை தாக்க முயன்றதால் பதற்றம் நிலவியது.

Story image


  
மறியலில் ஈடுபட்ட பெண்கள் காவல் ஆய்வாளர் நித்யாவை தாக்கம் முயற்சித்ததால் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த சில அரசியல் பிரமுகர்கள் ஆய்வாளரை சமாதானம் செய்து அனுப்பி வைத்து விட்டு பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் வர சொல்லி பொது மக்களிடம் பேசிய  ஊராட்சி தலைவர், இதற்கு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.