92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :12 ஜூன் 2023, 9:39 am

DIN

கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ. 3,600 லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசு 396 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.