கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ. 3,600 லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசு 396 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படை!