
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென மழையும் பெய்தது.
மழையால் கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் நடை பயிற்சியில் ஈடு பட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்த கட்டிடம், மரங்களின் கீழே ஒதுங்கினர்.
பலர் மழையில் நனைந்து தன் படம் எடுத்துக் கொண்டனர். மழையால் புதுச்சேரி நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. நல்ல சீதோசன நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.