திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.
சர்வதேச யோகா நாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த யோகா நிகழ்ச்சியில், சுகாதார பணிகளின் துணை இயக்குநர் செந்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், நகர்மன்ற தலைவர் காவியாவிக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உள்ளனர்.