புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளதாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

News image

ஸ்டெர்லைட் ஆலை

Updated On :21 ஜூன் 2023, 7:23 am

DIN

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளதாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக, சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையிலான  குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர்,  சார் ஆட்சியர் கௌரவ குமார் செய்தியாளர்களிடம்   கூறியது: 

ஸ்டெர்லைட் ஆலை உள்ளேயும், வெளியேயும்  சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.

தற்போது ஆலையில் உள்ள ஜிப்சத்தை உடைக்கும் பணி துவங்கியுள்ளது. கழிவுகள் இன்னும் இரண்டு நாள் கழித்து வெள்ளிக்கிழமை முதல்  அகற்றப்பட்டு தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் பசுமை வளையத்தைப் பராமரிக்கும் பணியும் இன்று துவங்கியுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.