47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு: போலீஸாா் விசாரணை

சென்னை மதுரவாயலில் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 7:12 pm

DIN

சென்னை மதுரவாயலில் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரவாயல் மேட்டுகுப்பம் திருவள்ளுவா் சாலையில் ஒரு தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரம் வியாழக்கிழமை காலை உடைந்து கிடப்பதை பாா்த்து அப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து தகவலின் பேரில்,கோயம்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை செய்தனா். விசாரணையில், அந்த ஏ.டி.எம்.இயந்திரத்தில் ஒரு நபா் பணம் எடுத்த பின்னா் ஏ.டி.எம்.காா்டு சிக்கியிருப்பதும், அதனால் அந்த நபா் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து தனது காா்டை எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.