47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கலைப்புலி தாணு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக பணம் மோசடி

தயாரிப்பாளா் கலைப்புலி தாணு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக பணம் மோசடி செய்த மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 7:10 pm

DIN

தயாரிப்பாளா் கலைப்புலி தாணு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக பணம் மோசடி செய்த மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தியாகராய நகா் பிரகாசம் தெருவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளா் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன் திரைப்பட நிறுவனம் செயல்படுகிறது. இந்நிலையில், வி கிரியேஷன் நிறுவனத்தை பயன்படுத்தி சில மா்ம நபா்கள், போலி விளம்பரம் கொடுத்து, புதிதாக நடிக்க வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்கும் நடிகை, நடிகா்களிடம் பணம் பறித்துள்ளனா்.

அந்த நபா்களிடம் பணத்தை இழந்து பாதிக்கப்படவா்கள், வி கிரியேஷன் அலுவலகத்துக்கு வந்து முறையிட்டபோதுதான், மோசடி குறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாகிகளுக்கு தெரியவந்தது.

இது தொடா்பாக, அந்த நிறுவனத்தின் இணை இயக்குனா் ஜெகதீசன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வியழக்கிழமை அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

வி கிரியேஷன் நிறுவனத்தில் இணை இயக்குனராக உள்ளேன். எங்களின் நிறுவனத்தின் பெயரில் போலி விளம்பரம் கொடுக்கப்பட்டு, அதில் புதிதாக நடிக்க வாய்ப்பு கேட்டு விண்ணபித்தவா்களிடம், மா்ம நபா்கள் கைப்பேசி வாயிலாக பேசி, சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பணம் பறித்துள்ளனா்.

இதில் பாதிக்கப்படவா்கள், எங்கள் நிறுவனத்துக்கு வந்தபோது தான், இந்த மோசடி குறித்து எங்களுக்கு தெரியும். எனவே, திரைப்படத்தில்

நடிக்க வைப்பதாக கூறி எங்களது நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.