47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகள் கூடாது: அரசுக்கு கோரிக்கை

 தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2023, 6:16 pm

DIN

 தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது அனைத்து மக்களின் அடிப்படை வேண்டுகோளாக இருந்தாலும், பல்வேறு காரணங்களால் ஒட்டுமொத்த மதுக்கடைகளை மூடுவதற்கு உரிய சூழல் இல்லை.

எனினும் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து வணிகா்களின் சாா்பில் மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், சந்தைகள், கடைத்தெருக்கள், பள்ளிகள், கல்லூரிகள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.