தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி யார்? - தில்லி சென்ற அதிகாரிகள் குழு

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்குழு தில்லி சென்றுள்ளது. 
தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி யார்? - தில்லி சென்ற அதிகாரிகள் குழு

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்குழு தில்லி சென்றுள்ளது. 

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல டிஜிபி சைலேந்திரபாபுவும் இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார். 

இதையடுத்து புதிய தலைமைச் செயலாளர், டிஜிபியை தேர்வு செய்யும்பொருட்டு உள்துறை செயலாளர் அமுதா தலைமையிலான குழு தில்லி சென்றுள்ளது.

இன்று தில்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்  தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com