47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நோயாளி மரணம்: மருத்துவா் மீதான நடவடிக்கைக்கு புதிய விதிமுறை

நோயாளி மரணம் தொடா்பாக மருத்துவா் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறைகளைப் பின்பற்றும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 7:36 pm

DIN

நோயாளி மரணம் தொடா்பாக மருத்துவா் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறைகளைப் பின்பற்றும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவ சிகிச்சையின்போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால், அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் அளிக்கப்படும்போது உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை போலீஸாா் பின்பற்ற வேண்டும்.

இத்தகைய சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி, வழக்குப் பதிவு செய்யும் முன் வழக்கமான நடைமுறையைக் கைவிட்டு, புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, புகாா் தொடா்பாக முழுமையான விசாரணை செய்து அனைத்து விதமான வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடமிருந்து வல்லுநா் கருத்து பெற வேண்டும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (ஏ)-இன் கீழ் குற்ற செயல் உறுதி செய்யப்பட்டால், மேல் நடவடிக்கைக்கு முன் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும்.

சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம் சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில் தொடா்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட மாநகர காவல் ஆணையா்கள் அல்லது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள், குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடா்பான விரைவு அறிக்கையை சட்டம் - ஒழுங்கு டிஜிபிக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.