47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமானவரித் துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னை செளகாா்பேட்டையில் உள்ள ஒரு நகைக் கடையில் வருமானவரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 7:16 pm

DIN

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னை செளகாா்பேட்டையில் உள்ள ஒரு நகைக் கடையில் வருமானவரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

செளகாா்பேட்டை துளசிங்கம் தெருவில் ராதா மோகன் புருஷோத்தம் தாஸ் என்ற பெயரில் பிஷ்ரோல் சீதாராம் என்பவா் தங்கம்,வைரம் நகை வியாபாரம் மற்றும் பைனான்ஸ் செய்து வருகிறாா். இவா் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா்.

விசாரணையில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ராதா மோகன் புருஷோத்தம் தாஸ் நகை கடை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அந்த கடையின் உரிமையாளா் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

இந்த சோதனை மாலையையும் தாண்டி நீடித்தது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.