தமிழ்நாடு
ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லி செல்கிறார்!
ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார்.
சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார்.
தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விமானம் மூலம் தில்லி செல்கிறார்.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு 27 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.